Powered by Blogger.

Saturday, May 25, 2013

சனிபகவான் கவசம்

01
கரு  நிறக்  காகம்  ஏறி காசினி  தன்னை  காக்கும்
ஒரு  பெரும்  கிரகமான ஒப்பற்ற  சனியே  உந்தன்
அருள்கேட்டு  வணங்குறேன். ஆதரித்து  எம்மை  காப்பாய்
பொருளோடு  பொன்னை  அள்ளி பூவுலகில்  எமக்கு  தராய்

02
ஏழரைச்சனியாய்  வந்தும் எட்டினில்  இடம்  பிடித்தும்
கோளாறு  நான்கில்  தந்தும் கொண்டதோர்  கண்ட  கத்தில்
ஏழினில்  நின்ற  போதும் இன்னல்கள்  தாரா  வண்ணம்
ஞாலத்தில்  எம்மை  காக்க நம்பியே  தொழுகின்றேன்  நான்

03
பன்னிரு  ராசி  கட்கும் பாரினில்  நன்மை  கிட்ட‌
எண்ணிய  எண்ணம்  எல்லாம் ஈடேறிவழிகள்  காட்ட‌
எண்னையில்  குளிக்கும்  நல்ல ஈசனே  உனைத்துதித்தேன்
புண்ணியம்  எனக்கு  தந்தே புகழ்  கூட்ட  வேண்டும்  நீயே

04
கருப்பினில்  ஆடை  ஏற்றாய் காக்த்தின்  ஏறி  நின்றாய்
இரும்பினை  உலோகமாக்கி எள்தனில்  பிரியம்  வைத்தாய்
அரும்பினால்  நீல  வண்ணம் அணிவித்தால்  மகிழ்ச்சி  கொள்வாய்
பெரும்  பொருள்   வழங்கும்  ஈசா பேரருள்  தருக  நீயே

05
சனியெனும்  கிழமை  கொண்டாய் சங்கடம்  விலக  வைப்பாய்
அனிதிகழ்  அனக்ஷ்சம்  பூசம் ஆன்றதோர்  உத்ரட்டாதி
இனிதே  உன்  விண்மீனாகும் எழில்  நீலா  மனைவி  யாவாள்
பணியாக  உனக்கு  ஆண்டு பத்தொன்போதென்று   சொல்வார்

 06
குளிகனை  மகனாய்  பெற்றாய் குறைகளை  அகல  வைப்பாய்
எழிலான  சூரியன்  உன் இனையற்ற  தந்தை  யாவார்
விழி  பார்த்து  பிடித்து  கொள்வாய் விநாயகர்  அனுமன்  தன்னை
தொழுதலோ  விலகிக்  கொள்வாய் துணையாகி  அருளை  தாராய்
 
07
அன்ன  தானத்தின்  மீது அளவிலா  பிரியம்  வைத்த‌
மன்னனே  சனியே  உன்னை மனதார  போற்றுகின்றோம்
உன்னையே  சரணடைந்தோம் உயர்வெல்லாம்  எமக்குத்  தந்தே
மன்னர்  போல்  வாழ்வதற்கே மணியான  வழிவகுப்பாய்

08
மந்தனாம்  காரி  நீலா மணியான  மகர  வாசா
தந்ததோர்  கவசம்  கேட்டே சனியென்னும்  எங்கள்  ஈசா
வந்திடும்  துயரம்  நீக்கு வாழ்வினை  வசந்தம்  ஆக்கு
எந்த  நாள்  வந்த  போதும் இனிய  நாள்  ஆக  மாற்று.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM