Powered by Blogger.

Monday, May 13, 2013

பால் அல்வா செய்வது எப்படி!!!

தேவையான பொருள்கள்:
  • காய்ச்சிய பால் - 5 கப்
  • அஸ்கா சர்க்கரை - 1/4 கப்
  • எலுமிச்சம்பழச் சாறு - 1/2 ஸ்பூன்
  • உருக்கிய நெய் - 1/4 கப்
  • சாரப்பருப்பு - 1 ஸ்பூன்
  • ஏலப்பொடி - 1/2 ஸ்பூன்                
  • பன்னீர் - 1 ஸ்பூன்
  • கிஸ்மிஸ் பழம் -6


செய்முறை: 

* கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்துச் சூடானவுடன், எலுமிச்சம் பழச்சாறு ஊற்றிக் கைவிடாமல் கிளறி தயிர் பதம் வந்தவுடன், விட்டு விட்டுக் கிறளவும்.

* பாலின் அளவு நான்கில் ஒரு பங்கு ஆனவுடன், அதில் சர்க்கரையைக் கொட்டி மீண்டும் கிளறவும்.

* பிறகு நெய்யை ஊற்றி, பாத்திரத்தின் மேல் பாகத்தில் ஒட்டியிருக்கும் பாலாடையையும் வழித்து பாலுக்குள்ளேயே போட்டு, சிறிதளவு கெட்டியாகி திரட்டுப் பால் பதம் வந்தவுடன், பன்னீரைத் தெளித்துப் பாத்திரத்தை 
 அடுப்பிலிருந்து இறக்கி, சாரப்பருப்பு போட்டுக் கிளறிவிடவும்.

* சூடாகப் பரிமாறவும். ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது எடுத்தும் பரிமாறலாம்.

No comments:

Post a Comment

Text Widget

TAMILEELAM